மனவளம் குன்றிய சிறுவர்கள் படிக்க விசேஷ சாப்ட்வேர்
பெங்களூர்:
மன வளம் குன்றிய, கல்வி நிலையங்களுக்கு சென்று கல்வி கற்க முடியாத சிறுவர்,சிறுமியருக்கு வீட்டிலிருந்தே கல்வி கற்கக் கூடிய வகையிலான கம்ப்யூட்டர்சாப்ட்வேர்கள் பெங்களூரில் அறிமுகப்படுத்தப்படும் எனறு இங்கிலாந்து சிறுதொழில்துறை மற்றும் இ காமர்ஸ் அமைச்சரச் பாட்ரிசியா ஹெவிட் தெரிவித்தார்.
இதுகுறித்து ஹெவிட் தரப்பில் பெங்களூரில் வெளியிடப்பட்ட அறிக்கையில்கூறப்பட்டிருந்ததாவது:
இங்கிலாந்தைச் சேர்ந்த பெக்கன்ட்-ஷெர்ஸ்டன் சாப்ட்வேர் நிறுவனம் இந்தசாப்ட்வேர்களைத் தயாரிக்கிறது. பெங்களூரில் உள்ள மன வளம் குன்றிய சிறுவர்,சிறுமியர்கள் தங்கியிருக்கும் மருத்துவமனைகளுக்கு இந்த சாப்ட்வேர் விநியோகம்செய்யப்படும். இதுதவிர, பெங்களூர், இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்திற்கும்இந்த சாப்ட்வேர் அளிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
பெங்களூரில் நடந்து வரும் ஐ.டி.காம்-2000 கருத்தரங்கில் இங்கிலாந்து தரப்பில்ஹெவிட் தலைமையிலான குழு கலந்து கொண்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற பலநிறுவனங்களும் இதில் கலந்து கொண்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications