3 இஸ்ரேல் வீரர்களை சுட்டுக் கொன்றனர் பாலஸ்தீனர்கள்
ஜெருசலம்:
இஸ்ரேலின் மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் ராணுவவீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 3 இஸ்ரேல் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பெத்லஹேம் அருகே உள்ள எல்-காதர் என்ற கிராமத்தில் நடந்த மோதலில் 2 வீரர்ளும்,பாலஸ்தீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஜெரிகோ என்ற இடத்தில் ஒரு வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்கிடையே, மேற்குக் கரை மற்றும் காஸா குன்றுப் பகுதியில் நடந்த பல்வேறுமோதல்களில் 6 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல்ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இத் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும், பல வீடுகள்சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்குக் கரைப் பகுதியில் பாலஸ்தீன படைகள் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலைநடத்தி வருகிறது. தாக்குதலுக்கு ஹெலிகாப்டர் தவிர பீரங்கிகளையும், டாங்குகளையும்இஸ்ரேல் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 5 வாரங்களாக இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும்இடையே நடந்து வரும் கடும் சண்டையில் இதுவரை 163 பேர் பலியாகியுள்ளனர்.இவர்களில் பெரும்பாலோர் பாலஸ்தீனர்களும், அரேபியர்களும் ஆவர்.












Click it and Unblock the Notifications