ஏரகரம் ஸ்ரீஸ்கந்தர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பகோணம்:
கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ள ஏரகரம் ஸ்ரீஸ்கந்தநாதர் திருத்தலத்தில் மகாகும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில்அமைந்துள்ளது ஏரகரம் கிராமம். இங்கு ஸ்ரீஸ்கந்தர் சன்னிதி கிழக்கு நோக்கிஅமைந்துள்ளது. தேவி ஸ்ரீ சங்கரநாயகியின் சன்னிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது.
இந்தக் கோயிலை திருநாவுக்கரசர், கச்சியப்ப முனிவர், குமரகுருபர சுவாமிகள்,அருணகிரிநாதர், நக்கீரர் ஆகியோர் புகழ்ந்து பாடியுள்ளனர்.
இந்தத் திருத்தலம் 12-ம் நூற்றாண்டில் விக்கிரம சோழரால் கட்டப்பட்டது எனகூறப்படுகிறது. இந்தக் கோவிலுக்கு மூக்கு வாக்கு சித்திஸ்தலம் என்ற பெயரும்உண்டு. அது பற்றி கூறப்படும் கதை:
குலோந்துங்க மன்னனுக்கு மூக்கு இல்லாமல் குழந்தை பிறந்தது. இதனால் மனம்வருந்திய மன்னன் ஜோதிடர்கள் கூறியதன் பேரில் ஸ்ரீஸ்கந்தரை வேண்டிக்கொண்டதனால் அந்தக் குழந்தைக்கு மூக்கு வந்ததால் முக்கு வாக்கு சித்திஸ்தலம் என்றபெயர் உண்டானது. மன்னனின் கண் நோயையும் இந்த இறைவன் தீர்த்து வைத்தார்.
தபோவன முனிவரால் சபிக்கப்பட்ட மந்தகன் என்ற அந்தணன் சாப விமோசனம்பெற்றதும் இந்தத் திருத்தலத்தில்தான். இங்கு அம்மனுக்கு வருடாவருடம்லட்சார்ச்சனை நடைபெறுவது மற்றுமொரு சிறப்பாகும்.
வேண்டியவருக்கெல்லாம் வேண்டியதை எல்லாம் இல்லையெனாது வாரி வழங்கிஅருள் புரியும் இறைவன் குடிகொண்டுள்ள இந்தக் கோவில் கும்பாபிஷேகம்வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் முலவருக்கும், தேவிக்கும்மற்றும் அங்குள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம்நடைபெறுகிறது












Click it and Unblock the Notifications