வீரப்பனுக்கு புலிகளுடன் தொடர்பு உண்டு.. ரேடியோ வெங்கடேசன்
கிருஷ்ணகிரி:
வீரப்பனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு உண்டு என தமிழ்த் தீவிரவாதிரேடியோ வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி அதியமான் கோட்டை அருகே உள்ள பாலஜக்கமன அள்ளியை அடுத்தபாறைபள்ளத்தில் இருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தை 20.09.1995-ம் ஆண்டுவெடிவைத்து தகர்த்தது தொடர்பாக வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரேடியோ வெங்கடேசன் உட்பட 3 பேரும்விசாரணைக்காக புதன்கிழமை கிருஷ்ணகிரிக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களதுகாவலை வரும் 15-ம் தேதி வரை நீடித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
முன்னதாக ரேடியோ வெங்கடேசன் நிருபர்களிடம் பேசுகையில், தமிழக அரசு தடாகைதிகளை விடுவித்த்து போல் கர்நாடக அரசும் செய்திருந்தால் பிரச்சனைகள்இருந்திருக்காது.
வீரப்பன் எங்கள் சோஷலிஸ கொள்கைகளை ஆதரிப்பதால்தான் நாங்கள் அவரைஏற்றுக் கொண்டோம்.
திருச்சி சிறையில் நெடுமாறன் உட்பட யாரும் எங்களை சந்திக்கவில்லை. நாங்களும்எந்த விதமான கடிதமும் கொடுக்கவில்லை. வீரப்பன் விடுத்துள்ள கோரிக்கையைநிறைவேற்றுவதில் உச்ச நீதமன்றம் காலதாமதம் செய்வது நல்லதுதான். எங்களுக்கு நீதிகிடைக்கும் என நம்புகிறோம்.
தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன. கர்நாடக அரசின்செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை
எங்களுக்கும் வீரப்பனுக்கும் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்பு உண்டு.வீரப்பனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு உண்டு என்பது உண்மைதான்.எங்கள் இயக்கமும், விடுதலைப்புலிகள் இயக்கமும் யாரையும் சார்ந்திருக்காமல்சுயமாக வளர்ந்த இயக்கங்கள் என அவர் கூறினார்.
ரேடியோ வெங்கடேசன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோதுவிடுதலைப்புலிகளையும், தமிழ்நாடு விடுதலைப்டை இயக்கத்தையும் ஆதரித்துகோஷம் எழுப்பியவாறு சென்றனர்.