வீரப்பன் இன்னும் அழைக்கவில்லை.. நெடுமாறன்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன், எப்போது மீண்டும் காட்டுக்கு வர வேண்டும் என்று கூறுகிறாரோ, அதற்குப்பின் தான் அரசுத் தூதர்கள் குழுகாட்டுக்குச் செல்லும் என்று தமிழ் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
வீரப்பனிடமிருந்து இன்னும் எங்களுக்கு முறையான அழைப்பு வரவில்லை. அவரது அழைப்புக்காகக் காத்திருக்கிறோம். வீரப்பனிடமிருந்து அழைப்பு வந்தபின் நான், கோபால், சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோர் அடுத்த முறையாகக் காட்டுக்குச் செல்வோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.
மீண்டும் காட்டுக்குச் செல்வது குறித்து, தமிழகக், கர்நாடக அரசுகள் அனுமதி வழங்கியபின் தூதர்கள் குழு காட்டுக்குச் செல்லும். தூதர்கள் குழுவைசந்திப்பதில் வீரப்பன் ஏன் தாமதம் காட்டுகிறார்? அவர் மெளனம் சாதிப்பதன் காரணம் என்ன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.
இருப்பினும், சுப்ரீம்கோர்ட்டில், வீரப்பன் விடுவிக்கக் கோரிய தடா கைதிகள் குறித்தான வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால்இவ்விஷயத்தில் வீரப்பன் தாமதம் ஏற்படுத்தலாம். வீரப்பனின் மனநிலை என்ன என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்றார்.
முன்னதாகக், கடந்த ஜூலை மாதம் 30 ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டார். அவருடன் கடத்தப்பட்ட நாகப்பா மற்றும்கோவிந்தராஜ் ஆகியோர் வீரப்பன் பிடியிலிருந்து தப்பித்து வந்து விட்டனர்.
தடா கைதிகளை விடுவித்தால்தான் ராஜ்குமாரை விடுவிக்க முடியும் என்று தனது நிலையில் வீரப்பன் உறுதியாக இருப்பதாலும், அவர் தனது பிடிவாதத்தைத்தளர்த்திக் கொள்ளாததாலும் ராஜ்குமார் விடுதலை இன்னும் சில நாட்கள் தாமதமாகலாம் என்று தெரிகிறது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications