புடின் வரவால் இந்திய, ரஷிய உறவு மேம்படும்
மாஸ்கோ:
ரஷிய அதிபர் புடினின் இந்திய வருகைக்குப் பிறகு இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே புதிய உறவு மலரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த எட்டு வருடங்களில் ரஷிய அதிபர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1993-ம் ஆண்டு போரிஸ் எல்ட்சின் இந்தியாவந்திருந்தார்.
இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி உயர் மட்ட அளவிலான சந்திப்புகளுக்கு ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் இது நடைமுறையில்கடைப்பிடிக்கப்படவில்லை. 1993-ம் ஆண்டுக்குப் பிறு இரு தரப்பு தலைவர்களும் 94 மற்றும் 97 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டுமே சந்தித்துள்ளனர்.94-ல் அப்போதைய பிரதமர் நரசிம்மராவும், 97-ல் தேவெ கெளடாவும் ரஷியா சென்றனர்.
உலக அளவில் தற்போது எழுந்துள்ள புதிய சூழ்நிலையில், புடினின் வருகை இரு நாடுகளின் உறவிலும் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் முன்பு போலவே சேர்ந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகரஷிய அரசியல் ஆய்வாளர் ரியபோவ் கூறியுள்ளார்.
புடினுடன் ரஷிய துணை பிரதமர் இல்யா கிளபனோவ் உள்ளிட்ட மிகப் பெரிய குழுவே இந்தியா வருகிறது.
சிவில் மற்றும் கிரிமனில் வழக்குகளில் இரு தரப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் உள்பட பல ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திடும் என்றுதெரிகிறது.
இதுதொடர்பாக அறிவியல், தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு, இந்திய மாநிலங்களுக்கும், ரஷியாவிலுள்ள பல பிராந்திய அரசுகளுக்கும் இடையிலான இருதரப்பு உடன்பாடுகளும் புடின் வருகையின்போது எட்டப்படவுள்ளன. மொத்தம் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications