கல்லூரி மாணவி விடுதியில் தற்கொலை
சென்னை:
காஞ்சிபுரம் அருகே தனியார் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் ஹாஸ்டல் அறையில்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் காதல் தோல்வியாஅல்லது ஈவ் டீசிங் கொடுமையா என்று போலீசார் விசாரித்து வுருகின்றனர்.
பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகள் பிரஷாந்தி (18). இவர் காஞ்சிபுரம்மாவட்டம் திருப்போரூர் காலவாக்கத்தில் உள்ள எஸ்.எஸ். என். பொறியியல் கல்லூரியில்2-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
கல்லூரி வளாகத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார். தீபாவளியைஒட்டி விடுமுறையில் ஊருக்குச் சென்று விட்டு 2 நாள் முன்புதான் கல்லூரிக்கு திரும்பினார்.
செவ்வாய்க்கிழமை கல்லூரி வகுப்பில் சக மாணவிகளுடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தவர் மாலையில் விடுதிக்குச் சென்றதும் அறையைப் பூட்டியவர்பூட்டியவர்தான். அதற்குப் பின் திறக்கவே இல்லையாம்.
மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அறைக் கதவு திறக்கப்படாததால் கவலையடைந்தமற்ற மாணவிகள் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர். உள்ளேயிருந்து சத்தமே இல்லை.
உடனே விடுதிக் காப்பாளரிடம் விஷயத்தைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் கதவைஉடைத்து உள்ளே புகுந்த போது பிரசாந்தி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவியின் திடீர் சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications