அமைச்சர் பதவி தரலியே ... வருந்துகிறார் திருநாவுக்கரசு
சென்னை:
மத்திய பாஜக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது எனக்கு அமைச்சர் பதவி தராததுவருத்தமளிக்கிறது என்று எம்ஜிஆர் அதிமுக தலைவரும், புதுக்கோட்டைநாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசு தெரிவித்தார்.
சென்னையில் திங்கள் கிழமை அவர் அளித்த பேட்டி:
மத்திய அமைச்சரவையை பிரதமர் வாஜ்பாய் விரிவுபடுத்தியுள்ளார். இதில் எங்கள்கட்சிக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று தொண்டர்கள் எல்லோரும்எதிர்பார்த்தனர். ஆனால், எங்களை புறக்கணித்து விட்டனர்.
பாஜக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முக்கியத்துவம்தரப்படாத கட்சியாக நாங்கள் இருக்கிறோம். மத்திய அமைச்சரவையில் எம்ஜிஆர்அதிமுக தவிர எல்லா கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. "பிளாக்மெயில்செய்தவர்களுக்கு எல்லாம் மந்திரி பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜியின் மிரட்டலைத் தொடர்ந்து அவரை சமாதானப்படுத்த ஜார்ஜ்பெர்னாண்டசை பிரதமர் அனுப்பி உள்ளார். மேற்கு வங்காளத்தில் 2 பாஜக எம்.பிக்கள்உள்ளனர். அந்த இரண்டு பேருமே மந்திரிகள். ஆனால், எங்களுக்கு இல்லை. இதுஎன்ன நியாயம்?
நாங்கள் புறக்கணிக்கப்படுவதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை.
அமைச்சர் பதவி தராததால் எங்கள் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜகஅணியில் ஏன் தொடர வேண்டும் என்று கேட்கின்றனர்.
எனக்கு அமைச்சர் பதவி தராதது வருத்தமளிக்கிறது. எனக்கு நானே எப்படி பதவிகேட்பது என்று தான் அமைதி காத்தேன். ஆட்சிக்கு வருவதற்கு முன்புதனிப்பெரும்பாமை கிடைத்தாலும் கூட்டணி ஆட்சி தான் அமைப்போம் என்ற பாஜகஇப்போது கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய பதவிகளை ஒதுக்க மறுக்கிறது. எங்களுக்குஇதில் வருத்தம் இருந்தாலும் இந்த அணியை விட்டு வெளியேற மாட்டோம்.
ஜனவரி 20ம் தேதி மதுரையில் எம்ஜிஆர் அதிமுக மாநில மாநாடு நடத்துகிறோம்.பிரதமரை அழைத்துள்ளோம். எஸ்.டி.சோமசுந்தரம் தலைமையில் முன்னாள்அதிமுகவினர் "புரட்சித்தலைவர் அதிமுக என்ற பெயரில் கட்சி ஆரம்பித்துள்ளனர்.அதற்கும் எங்கள் கட்சிக்கும் பெயரில் பெரிய வித்தியாசம் இல்லை. இதை எதிர்த்துநீதிமன்றம் செல்லும்படி எங்கள் கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால், நான் அதைஏற்கவில்லை என்றார் திருநாவுக்கரசு.