விடுதலைப் புலிகளிடம் ரஷியக் கப்பல்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் ரஷியக் கப்பல் ஒன்றை இயக்கியதாக இலங்கை கடற்படைகூறியுள்ளது.
இதுகுறித்து இலங்கை கடற்படை கமாண்டர் சரத் மொஹத்தி கூறுகையில், புதன்கிழமைஇரவு முல்லைத் தீவு அருகே கடலில், இலங்கை கடற்படை வீரர்களுக்கும், விடுதலைப்புலிகளின் கடற் பிரிவு புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. ஏராளமானவிடுதலைப் புலிகள் இந்த சண்டையில பங்கேற்றனர்.
சண்டையின்போது விடுதலைப் புலிகள் இருந்த படகுகளுக்குப் பாதுகாப்பாக ஒருகப்பல் வந்தது. சண்டையின் இறுதியில், விடுதலைப் புலிகள் தாங்கள் வந்த படகுகளில்தப்பிச் சென்றனர். அப்போது அவர்களுக்குப் பாதுகாப்பாக ஒரு கப்பல் சென்றது.
கடற்படை வீரர்களால் அந்தக் கப்பலை சுடுவதற்கு இயலவில்லை. திரிகோணமலைதுறைமுகம் வரை அந்தக் கப்பல் புலிகளின் படகுகளுக்குத் துணையாகச் சென்றது.துறைமுகம் சென்றதும் புலிகள் கப்பலை விட்டு விட்டு தப்பினர். அங்கிருந்துமுல்லைத்தீவு காட்டுப் பகுதிக்குள் நுழைந்து விட்டனர்.
புலிகள் விட்டுச் சென்ற கப்பலை சோதனையிட்டு பார்த்தபோது, அது ரஷியத்தயாரிப்பு கப்பல் என்று தெரிய வந்தது. கப்பலுக்கு உத்யோஸ் என்றுபெயரிடப்பட்டிருந்தது.
கப்பலில் 22 பேர் இருந்ததாகத் தெரிகிறது. இருப்பினும் அனைவரும் என்னஆனார்கள் என்று தெரியவில்லை.
இந்த சண்டையில் விடுதலைப் புலிகளின் இரண்டு படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. பலபடகுகள் சேதமடைந்தன என்றார் அவர்.![]()












Click it and Unblock the Notifications