வீரர்களிடம் பணம் பறிப்பு ..முன்னாள் ஒலிம்பிக் வீரர் குமுறல்
ஹிஸார்:
போட்டிகளுக்குத் தேர்வு செய்வதாகக் கூறி வீரர் மற்றும் வீராங்கனைகளிடம் பணம்பறிக்கப்படுவதாக விளையாட்டு அமைப்புகள் மீது முன்னாள் ஒலிம்பிக் வீரரும்,அர்ஜுன விருது பெற்றவருமான மல்யுத்த வீரர் உதய் சங் பால்வான் குற்றம்சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு அமைப்புகளிலும் முறைகேடுகள்நடக்கின்றன. தேர்வு செய்கிறோம் என்ற பெயரில் வீரர் மற்றும்வீராங்கனைகளிடமிருந்து ஏராளமான பணம் பெறப்படுகிறது.
மல்யுத்த விளையாட்டு அமைப்பில் இத்தகைய மோசடி அதிகமாக உள்ளது. அதுவும்வீராங்கனைகளிடம் அதிக பணம் பெறப்படுகிறது. சமீபத்தில் மஞ்சு என்றவீராங்கனையிடம் ரூ.13 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
போலந்தில் சமீபத்தில் நடைபெற்ற உலக பெண்கள் மல்யுத்தப் போட்டியில் தேர்வுசெய்யப்படுவதற்காக மஞ்சுவிடமிருந்து மல்யுத்த விளையாட்டு அமைப்பு பணம்பெற்றுள்ளது.
போட்டியில் கலந்து கொள்ளும் மஞ்சுவுக்கு உபகரணங்கள் வாங்க அந்த பணத்தைமல்யுத்த விளையாட்டு அமைப்பு பெற்றுள்ளது. ஆனால், உபகரணங்களைஅமைப்பின் பணத்திலிருந்து வாங்கியதாக கணக்கு காட்டப்படுகிறது.
மஞ்சு தவிர மேலும் பல மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் பணம் பெறப்பட்டுள்ளது.மஞ்சு மட்டும் தைரியமாக அதைத் தெரிவித்துவிட்டார். மற்றவர்கள் வெளியேசொல்லவில்லை. அவ்வளவுதான்.
ஒரு போட்டியில் கலந்து கொள்ள ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கானஅனைத்து செலவுகளையும் அந்த குறிப்பிட்ட விளையாட்டு அமைப்புதான் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதைவிடுத்து வீரர், வீராங்கனைகளிடம் பணம் பெறக்கூடாது.
நான் மல்யுத்தப் போட்டியில் பங்கு கொண்ட காலத்திலிருந்தே இத்தகையமுறைகேடுகள் நடந்து வருகிறது. நான் போட்டிகளில் பங்கு கொள்ள என்னிடமும்பணம் பெறப்பட்டது.
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்காததற்கு நாட்டில் உள்ள விளையாட்டுஅமைப்புகளின் திறமையில்லாத செயல்பாடுதான் காரணம். மேலும், நாட்டின்விளையாட்டுக் கொள்கை சரியாக இல்லை.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் விளையாட்டு அமைப்புகளுக்குத்தலைவர்களாக உள்ளனர். அவர்களைப் போன்றவர்கள் உருவாக்கும் விளையாட்டுக்கொள்கையால் எந்தப் பயனும் ஏற்படாது.
விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களை விளையாட்டு அமைப்புகளுக்குப்பொறுப்பாளர்களாக நியமிக்கவேண்டும். விளையாட்டுக் கொள்கையும்மாறவேண்டும். அப்போதுதான் சர்வதேசப் போட்டிகளில் இந்தியாவுக்கு நிறையபதக்கங்கள் கிடைக்கும்.
யு.என்.ஐ.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications