For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.நா. உறுப்பினரானது யூகோஸ்லேவியா

By Staff
Google Oneindia Tamil News

ஐ.நா.சபை:

ஐக்கிய நாடுகள் சபையில் புதிய உறுப்பினராக யூகோஸ்லேவியா இடம்பெற்றுள்ளது.

பழைய யூகோஸ்லேவியா நாடு பிரிந்து கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா.சபையில் யூகோஸ்லேவியாவுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

1945 ம் ஆண்டு பழைய யூகோஸ்லேவியா ஐ.நா.சபையில் அடிப்படை உறுப்பினராக இடம் பெற்றிருந்தது. செர்பியா மற்றும் மான்டிநீக்ரோ ஆகியவைஅடங்கிய பழைய யூகோஸ்லேவியாவில் அதிபர் மிலேசோவிக் தலைமையில் ஆட்சி நடந்து வந்தது.

1992-ல் பழைய யூகோஸ்லேவியாவிலிருந்து, போஸ்னியா, குரோஷியா, மாசிடோனியா, ஸ்லவோனியா ஆகிய பகுதிகள் பிரிந்தன. இதனால்யூகோஸ்லேவியா நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. பல நாடுகளாக பிரிந்த யூகோஸ்லேவியாவுக்கு ஐ.நா.வில்அங்கீகாரம் கொடுக்க முடியாது என்று ஐ.நா. கூறிவிட்டது.

இதற்கிடையே கடந்த மாதம் நடந்த தேர்தலின்போது அதிபர் மிலோசேவிச் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அதிபராக கோஸ்டுனிகாதேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய அதிபர் ஆனவுடன், ஐ.நா.சபையில், யூகோஸ்லேவியாவுக்கு மீண்டும் உறுப்பினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஐ.நா.வுக்குகோரிக்கை விடுத்தார்.

கோஸ்டுனிகாவின் கோரிக்கையைப் பரிசீலித்த ஐ.நா., மீண்டும் யூகோஸ்லேவியாவுக்கு உறுப்பினர் அந்தஸ்து வழங்குவதாக அறிவித்தது.

தற்போது ஐ.நா.சபையில் 189 நாடுகள் உறுப்பினர்ராக உள்ளன. யூகோஸ்லேவியாவையும் சேர்த்து 190 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
Reuters

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X