For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பக்கிங்காம் கால்வாயை சுத்தம் செய்ய ரூ. 491 கோடி

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:

சென்னையில் உள்ள பக்கிங்காம் மற்றும் அடையாறு கால்வாய் கழிவு நீர் சுத்திகரிப்பிற்குமத்திய அரசு ரூ. 491 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என மாசுக் கட்டுப்பாட்டுமற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தெரிவித்தார்.

கரூர் அருகே உள்ள செல்லாண்டிபாளையத்தில் நடந்த கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தைத்திறந்து வைத்து அமைச்சர் பழனிச்சாமி பேசியதாவது:

சென்னையில் உள்ள பக்கிங்காம் மற்றும் அடையாறு கால்வாயைச் சுத்திகரிக்க மத்திய அரசுரூ. 491 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை மத்திய அமைச்சர் டி.ஆர் பாலுபெற்றுக் கொடுத்துள்ளார்.

மாசுக்கட்டுப்பாட்டுத் துறையின் மூலம் இதுவரை 28 பொது கழிவு நீர் சுத்திகரிப்புநிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

மேலும், தமிழகத்தில் காவிரி, வைகை, பொருனை ஆறுகளில் கலக்கும் கழிவு நீர் குறித்துஆய்வு நடத்த அக்டோபர் 12 மற்றும் 13ம் தேதி மத்திய அரசு ஆய்வுக் குழு வருகிறது.

இந்தக் குழு இங்குள்ள தொழிற்சாலைகளை ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கைசமர்ப்பிக்கவுள்ளது.

தமிழக அரசு தொழில் அதிபர்களுடன் நல்லுறவு கொண்டுள்ளது. இவர்களின் நலனில்அக்கறை செலுத்தி வருகிறது. தொழில்களின் பெருக்கத்தின் மூலம் தான் மக்களின்வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் என்றார்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X