For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொது இடங்களில் சிகரெட் பிடிக்கத் தடை வருமா?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான இறுதி விசாரணை இம்மாதம் 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யக்கோரி சென்னை நீதிமன்றத்தில்யு.என்.ஆர் . ராவ் என்பவர் பொது நல மனு தாக்கதல் செய்திருந்தார்.

இது குறித்து பதில் அளிக்கக்கோரி தமிழக அரசுக்கும், சுகாதாரத் துறைஇயக்குனருக்கும் நோட்டீஸ் அனுப்ப முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. ஆனால் அரசுமவுனம் சாதித்து வருகிறது. இதுவரை எநத விதமான பதிலும் வரவில்லை.

இந்நிலையில் வியாழக்கிழமையன்று நீதிபதி என்.கே.ஜெயின், நீதிபதிரவிராஜபாண்டியன் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் முன்பு மூத்த வழக்கறிஞர்யு.என்.ஆர். ராவ் ஆஜராகி தனது மனுவுக்கு இது வரை தமிழக அரசு பதில் மனு தாக்கல்செய்யாததால் தனது மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றார்.

அரசு பிளீடர் விடுதலை கூறுகையில், மனு தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம்வேண்டும் என கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து விரைவில் அரசு பதில் மனு அளிக்கவேண்டும் எனவும் இந்த மனு மீதான இறுதி விசாரணையை இம்மாதம் 23-ம்தேதிக்கும் ஒத்தி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X