5 கிரிக்கெட் வீரர்கள் 15 நாள் "சஸ்பெண்ட்
ஹைதராபாத்:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளஐந்து வீரர்கள், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதிலிருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளனர்.
சி.பி.ஐ.யின் 16 பக்க விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முகம்மதுஅஸாருதீன், அஜய் ஜடேஜா, நயன் மோங்கியா, அஜய் சர்மா, மனோஜ் பிரபாகர்ஆகியோர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிரபாகர் ஏற்கனவே முதல் தர கிரிக்கெட்போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
பரோடாவிலிருந்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜே.ஒய்.லெலேதொலைபேசியில் கூறுகையில், ஐந்து கிரிக்கெட் வீரர்களும் அடுத்த 15 நாட்களுக்குஉள்ளூர் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இறுதிதீர்ப்பு வழங்கப்படும்.
முன்னாள் சி.பி.ஐ. இணை இயக்குனர் கே.மாதவன் தலைமையில் ஒரு விசாரணைக்கமிஷனை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இக்குழு 15 நாட்களில் தனதுபரிந்துரையை அளிக்கும். அதன் அடிப்படையில் இந்த ஐந்து வீரர்கள் மீதும் இறுதிநடவடிக்கை எடுக்கப்படும் என்றார் லெலெ.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications