பொதுமக்களிடம் அடிபட்டு இறந்த திருடன்
திருக்கோவிலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் அருகே பொதுமக்களே சேர்ந்துதிருடனை அடித்துக் கொன்றனர்.
திருவெண்ணை நல்லூர் என்ற ஊரில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைஇரவு இங்கு இரவு மின் தடை ஏற்பட்டுள்ளது. அப்போது பிரபாகரன் என்பவர், அந்தப்பகுதியில் வசிக்கும் பாவாடை என்பவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார்.
காலடி சப்தம் கேட்டு பாவாடையின் மனைவி எழுந்துள்ளார். வீட்டுக்குள் பிரபாகரன்நிற்பதைப் பார்த்ததும்குரல் எழுப்பினார். வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அவர்வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டார்.
பாவாடையின் மனைவியின் குரலைக் கேட்ட பொதுமக்கள் அங்கு கூடினர். அப்போதுவீட்டுக்குள் இருந்த இரும்புத் தடியால் பொதுமக்களைத் தாக்க பிரபாகரன் முயன்றார்.ஆனால் பொதுமக்கள் அதைத் தடுத்து பிரபாகரனைப் பிடித்து மின் கம்பத்தில் கட்டினர்.பின்னர் அனைவரும் சேர்ந்து அடித்தே பிரபாகரனைக் கொன்றனர்.












Click it and Unblock the Notifications