பார்வதி ஷா கொலை வழக்கு .. மைத்துனர் அப்பீல்
சென்னை:
பாண்டிச்சேரி வைர வியாபாரி மனைவி பார்வதி ஷா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற, முக்கியக் குற்றவாளியான அவரது மைத்துனர் கமல்ஷா சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
அந்த மேல் முறையீட்டு மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
எனது அண்ணி பார்வதி ஷா கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் என்னை முக்கியக் குற்றவாளியாகச் சித்தரித்து, தூக்குத் தண்டனை விதித்துள்ளனர்.
பாண்டிச்சேரி முதன்மை நீதிபதி ஈ.வி.குமார் இவ்வழக்கை முறையாக விசாரிக்காமலேயே யூகத்தின் அடிப்படையில் தீர்ப்புக் கூறியுள்ளார். இந்தத் தண்டனைமிகவும் கடுமையானதாக உள்ளது. இதனால் இவ்வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மறுபடியும் தீர ஆராய்ந்து தீர்ப்புக் கூற வேண்டும் என்று மனுவில்குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஜூலை 14 ம் தேதி வைரவியாபாரி ஷா வின் மனைவி பார்வதி ஷா அவரது மைத்துனர் கமல் ஷா வால் கற்பழித்துக் கொலைசெய்யப்பட்டார். இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான கமல் ஷா மற்றும் அவரது தாய் பத்மாவதி ஷா ஆகியோர் மீது வழக்குத்தொடரப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 28 ம் தேதி இந்த வழக்கு பாண்டிச்சேரி முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி ஈ.வி.குமார் கமல்ஷா வுக்குத் தூக்குத் தண்டனையும், பத்மாவதி ஷா வுக்கு, இரண்டு வருடக் கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார் என்பது நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications