பெட்ரோல் பங்க்கில் ரூ. 2 லட்சம் கொள்ளை
ஒசூர்:
ஒசூரில் பெட்ரோல் பங்கில் நள்ளிரவில் வந்து ரூ. 2 லட்சத்தைக் கொள்ளையடித்துச்சென்றவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஒசூரில் சில மாதங்களுக்கு முன்பு எல்.ஐ.சி.,அலுவலகத்தில் லாக்கரை உடைத்து ரூ.3லட்சம் பணம் கொள்ளை போனது. இந்த நிலையில், பெட்ரோல் பங்க்கில்அடிக்கப்பட்டுள்ளது.
ஒசூரிலுள்ள கிருஷ்ணகிரி பைபாஸ் ரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் செயல்பட்டுவருகிறது. 24 மணி நேரமும் இந்த பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்குவசூலாகும் பணத்தை ஆபிசில் உள்ள லாக்கரில் வைத்து விடுவர்.
நவம்பர் 3ம் தேதி அதிகாலையில் மானேஜர் கனிபாய், கேஷியர் பிரபு, ரியாஸ், ஷேக்ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது அங்கு டிராக்ஸ் ஜீப்பில் 6 பேர் கொண்டகும்பல் வந்தது. அந்த கும்பல், தாங்கள் வைத்திருந்த துப்பாக்கி அரிவாள்களைக்காட்டி அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
டெலிபோனைத் துண்டித்து கைதுப்பாக்கியை காட்டி லாக்கர் சாவியை வாங்கித்திறந்தனர். தனி அறையில் இருந்த இந்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சத்து 78ஆயிரம் ரூபாயை எடுத்துக் காாெண்டு தப்பிச் சென்றனர்.
கொள்ளையர்களில் ஒருவர் தமிழிலும், மற்றவர்கள் இந்தியிலும் பேசியுள்ளனர்.












Click it and Unblock the Notifications