For Daily Alerts
Just In
ராணுவத் தாக்குதலில் 62 விடுதலைப் புலிகள் சாவு
கொழும்பு:
யாழ்ப்பாணத்தில் ராணுவத் தாக்குதலில் 62 விடுதலைப் புலிகள் இறந்தனர் என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சனத் கருணாரத்னே கூறுகையில், கடந்த 31 ம் தேதி முதல் கிழக்குத் திரிகோணமலை மாவட்டத்தில்புலிகளின் பதுங்கு குழிகள் மீது விமானப்படை வீரர்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
படகுகளில் வந்த கடற் புலிகளை கடற்படை வீரர்கள் தாக்கினர். இந்த தாக்குதலில் மொத்தம் 62 விடுதலைப் புலிகள் இறந்தனர் என்றார்.
Story first published: Sunday, November 5, 2000, 5:30 [IST]