வறுமைக்காக பெற்ற குழந்தையை ரூ. 200க்கு விற்ற தந்தை
புவனேஸ்வர்:
ஒரிசா மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி,தங்களது வறுமைக்காக பெற்ற மகனை ரூ. 200க்கு விற்றனர். அந்தக் குழந்தை பிறந்துஒரு மாதமே ஆனதுதான் கொடுமையான அம்சம்.
ஜெய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜகன்னாத் சமோனாத்ராய் (32). இவரதுமனைவி சஞ்சு (26). இருவரும் கூலி வேலை செய்து வருபவர்கல். சந்திக்கோல் என்றபகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளாள். அதுதவிர ஒரு மாதத்திற்கு முன்புஇன்னொரு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் சஞ்சுவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஜகன்னாத்துக்கும் உடல் நலம் சரியில்லை. இதனால் இருவரும்வேலைக்குச் செல்ல முடியவில்லை.
நிதியுதவி செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்தை அணுகினர். ஆனால் வெறும்கையுடனேயே திரும்ப நேரிட்டது.
இந்த நிலையில் ஒரிசாவைத் தாக்கிய புயல் சந்திக்கோல பகுதியிலும் தனதுமுத்திரையை பதித்துச் சென்றது. ஜெகன்னாத் குடும்பமும் ஒரு உடைந்து போன வீட்டில்தஞ்சம் புகுந்தது. சில நாட்கள் இந்த வீட்டில்தான் ஜகன்னாத் குடும்பத்தினர் தங்களதுசிசுக்களுடன் தங்கியிருந்தனர்.
வறுமையில் வாடிய ஜகன்னாத் குடும்பத்தினருக்கு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உணவுஅளித்துஉதவினர். அப்போது கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம், தங்களது வறுமை தீரவேண்டுமானல், இரண்டாவது பிறந்த குழந்தையை விற்பதைத் தவிர வேறுவழியில்லை என்று ஜகன்னாத் கூறியுள்ளார்.
இதையடுத்து ரமேஷ் சிங் என்பவர் குழந்தையை வாங்கிக் கொள்வதாக கூறினார்.ஒப்பந்தம் ஏற்பட்டது. கிராமத்து பெருந்தலைகள் முன்பு ரூ. 200 பணத்தை வாங்கிக்கொண்டு குழந்தையைக் கொடுத்தார் ஜகன்னாத்.
வறுமைக்காக பெற்ற குழந்தையை விற்றது தொடர்பாக ஜகன்னாத் கூறுகையில்,இதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. உயிர் பிழைக்க வேண்டுமானால்,சாப்பாடு தேவை. அதற்குப் பணம் தேவை. அது எங்களிடம் இல்லை. எனவேதான்மனதைக் கல்லாக்கிக் கொண்டு குழந்தையை விற்றோம் என்றார்.
ஒரிசாவில் கடந்த ஒரு மாதத்தில் குழந்தையை விற்ற 2-வது நபர் ஜகன்னாத் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஆங்குல் என்ற கிராமத்தில் சமீபத்தில் ஒரு பெண் தனது மகனை ரூ.1000க்கு விற்றார் என்பது நினைவு கூறத்தக்கது.
ஒரிசாவின் மேற்குப் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. ஆனால் மறுபுறத்தில்,கடலோர மாவட்டங்களில் கடந்த ஆண்டு வீசிய புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகள்இன்னும் மறுவாழ்வு பெறாமல் உள்ளன. அந்தப் புயலில் 10,000க்கும் மேற்பட்டோர்இறந்ததை இந்தியர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications