விபசார பெண்களின் மகள்களுக்கு இடைவெளி இல்லங்கள்
சேலம்:
விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் மகள்களின் நல்வாழ்வுக்காக "இடைவெளிஇல்லங்கள் அமைக்கப்படும் என மாநில சமூகநலத்துறை அமைச்சர்சற்குணபாண்டியன் தெரிவித்தார்.
கரூர் அருகே உள்ள குளித்தலையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டுசமூகநலத்துறை அமைச்சர் சற்குணபாண்டியன் பேசியதாவது:
தமிழகம் முழுவதும் மகளிர் நலனுக்காக பல திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது.இந்தத் திட்டங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மாநிலத்தில் பல்வேறு சமூகசேவைகளை செய்துள்ளது.
இத்தகைய மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழகத்தில் 45 ஆயிரத்து 719 உள்ளன.இவற்றின் சிறுசேமிப்பு நிதியாக ரூ. 52 கோடி உள்ளது.
இந்தக் குழுக்கள் மூலம் மகளிர் தொழில் தொடங்க நிதியுதவி அளித்து வருகிறோம்.மகளிருக்குத் தொழிற் பயிற்சியும் அளித்து வருகிறோம். தமிழகத்தில் 163பெண்களுக்கு இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 100 பெண்களுக்கு பயிற்சிஅளிக்கப்படும்.
மாவட்டந்தோறும் வரதட்சணைக் கொடுமையைத் தடுக்க ஆலோசனைக் குழுக்கள்அமைத்து வருகிறோம்.
பெண் சிசுவதையைத் தடுக்க தனிச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் சிசுக்கொலையைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரம்மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பெண் சிசுக்கொலை செய்பவர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்படும்.
பெண் குழந்தையை வளர்க்க முடியாதவர்கள் அதை அரசிடம் ஒப்படைத்து விடலாம்.அரசு இக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும்.
இதே போன்று விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள், தங்களது வயதுக்கு வந்த பெண்குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்பதாலும், இதே தொழிலில் இந்தப்பெண்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதால், இதனைத் தடுக்க அரசு முடிவுசெய்துள்ளது.
இதற்காக சோதனை அடிப்படையில், நாமக்கல், விராலிமலை, உளுந்தூர் பேட்டை,நாமக்கல் ஆகிய இடங்களில் ரூ. 6 லட்சம் செலவில் "இடைவெளி இல்லங்கள்அமைக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் 25 பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.இவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இப்பெண்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கவும் அரசு உதவும் என்றார்.












Click it and Unblock the Notifications