சாலையில் எண்ணெய் ஆறு.. அலைமோதிய பொது ஜனம்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை அருகே தறிகெட்டு ஓடிக் கவிழ்ந்த எண்ணெய் டேங்கர் லாரியிலிருந்துதேங்காய் எண்ணெயைப் பொதுமக்கள் குடம் குடமாகப் பிடித்துச் சென்றனர்.

ஈரோட்டிலிருந்து கேரளாவில் உள்ள எர்ணாகுளத்திற்கு ஒரு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. இதில் 12 ஆயிரம் லிட்டர் தேங்காய் எண்ணெய் இருந்தது.

லாரி சூலூர் அருகே உள்ள காமாட்சிபுரம் பிரிவு என்ற இடத்திற்கு வந்தபோதுதறிகெட்டு ஓடியது. திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்தபள்ளத்தில் கவிழ்ந்தது.

இதையடுத்து கேபினில் இருந்த டிரைவர் வில்சன் மற்றும் கிளீனர் ராஜேஷ்ஆகியோரைப் பொதுமக்கள் மீட்டனர். அதே சமயம், கவிழ்ந்த லாரியில் ஒரு ஓட்டைஏற்பட்டது. இதையடுத்து, தேங்காய் எண்ணெய் கொட்டத் தொடங்கியது. இதையறிந்தபொதுமக்கள் தேங்காய் எண்ணெயை குடங்களை எடுத்து வந்து பிடிக்கத்தொடங்கினர்.

பலர் தங்கள் கைக்கு கிடைத்த பாத்திரத்தை எடுத்து வந்து பிடித்தனர். பலர் 5 லிட்டர்கேன், 10 லிட்டர் கேன் என கேன்களை வாங்கி வந்து பிடித்துக் கொண்டிருந்தனர்.

சம்பவம் குறித்து சூலூர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து வந்துபார்த்தனர். அப்போது பொதுமக்கள் கூட்டமாக, எண்ணெய் பிடிக்க அடிதடியில்இறங்கியிருந்தனர். இவர்களைக் கலைத்து விட்டு, போலீசார் எண்ணெய் கசிவைஅடைக்க முயற்சி மேற்கொண்டனர்.

இந்த சம்பவத்தால், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய் வீணானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+