For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொள்ளையடிக்க வந்து மாட்டியவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

கோவை அருகே கொள்ளையடிக்க வீட்டிற்குள் புகுந்த மூன்று பேரை பொதுமக்கள்மடக்கிப் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

கோவை கரும்புக் கடையைச் சேர்ந்தவர் அலிமா. இவர் தனது குடும்பத்தினருடன்தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலையில் சிலர் வந்து அவர்களது வீட்டுக்கதவைத் தட்டினர். கதவை அலிமா திறந்தபோது, 3 பேர் வீட்டிற்குள் வந்தனர்.

அவர்கள், அலிமாவின் குடும்பத்தினரைப் பார்த்து "சத்தம் போட்டால், கொன்றுவிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இந்த மிரட்டல் சத்தம் பக்கத்திலிருந்தவர்களுக்கு கேட்டுள்ளது. இதனால்அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஒன்று கூடினர். 3 கொள்ளையர்களும் அங்குள்ளபொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு மக்கள்கும்பலாக நிற்பதைக் கண்டு திகைத்தனர்.

இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

பொதுமக்கள் ஓட முயன்ற அவர்களைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். 3 பேரையும்மரத்தில் கட்டி வைத்து போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.

போலீசார் இவர்களைக் கைது செய்து விசாரணை செய்தனர்.

இதில் இவர்கள் குனியமுத்தூரைச் சேர்ந்த அபுதாகீர், ஜனாப், அப்துல் காதர் என்பதுதெரிய வந்தது. போலீசார் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X