தூங்கும் புலியை இடறுகிறார் ஜெ.. அன்பழகன்

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தூங்கும் புலியை இடறுகிறார் ஜெயலலிதா என சேலத்தில் நடந்த கூட்டத்தில் மாநிலகல்வி அமைச்சர் அன்பழகன் பேசினார்.

கருணாநிதி குறித்து ஜெயலலிதாவின் பேச்சைக் கண்டித்து சேலத்தில் கண்டனப் பேரணிநடந்தது. இதையடுத்து மாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் மாநில கல்வி அமைச்சர்அன்பழகன் பேசியதாவது:

எப்படிப் பேச வேண்டும் என்ற வரைமுறையே இல்லாமல் ஜெயலலிதா பேசிவருகிறார். முதல்வர் கருணாநிதியை இழிவுபடுத்திப் பேசுவது பெரியாரைஇழிவுபடுத்துவதற்குச் சமம்.

இதைத் தமிழர்கள் ஏற்க மாட்டார்கள். உரிய தண்டனையை மக்கள் வழங்குவர்.தூங்கும் புலியை இடறி வருகிறார் ஜெயலலிதா.

புதிய அக்கிரமங்கள் செய்தால், பழைய அக்கிரமங்களை மக்கள் மறந்து விடுவார் எனநினைத்து வருகிறார்.

எத்தனைக் கோயில்கள் ஏறி இறங்கினாலும், எத்தனை சாமியை வேண்டினாலும்,எத்தனை யாகம் நடத்தினாலும், அவர் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.

இப்போது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அது ரத்து செய்யப்பட்டதாகஅர்த்தம் இல்லை. அடுத்து வரும் தேர்தலில் போட்டியிட முடியாது. தேர்தலிலேயேநிற்க முடியாது என்றால், ஆட்சிக்கு வருவது எப்படி முடியும்?.

ஆனால் அவர் என்னவோ ஆட்சிக்கே வந்து விட்டது போல தோற்றத்தை உருவாக்கிவருகிறார். மக்கள் சுலபமாக அவர் செய்த தவறுகளை மறந்து விடவில்லை. இந்ததேர்தலிலும் தண்டனை கிடைக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+