காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 6 பேர் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு லஸ்கார்-ஈ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், ராணுவ இளநிலைஅதிகாரி ஒருவரும், மூன்று ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் 2 தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.
குப்வாரா மாவட்டம் மாகம் ஹான்ட்வாரா பகுதியில் சனிக்கிழமை இரவு தீவிரவாதிகள், ராணுவ முகாம் மீது தாக்குதல் தொடுத்தனர். ராணுவவீரர்களும் திருப்பித் தாக்கினர். இரு தரப்பினருக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், ராணுவ இளநிலை அதிகாரி ஒருவரும், மூன்று ராணுவ வீரர்களும்கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்கள் படு காயமடைந்தனர்.
ராணுவ வீரர்கள் திருப்பித் தாக்கியதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களது பெயர்கள் அபு தால்ஹா மற்றும் அபு அப்துல் ரஹ்மான் என்றுதெரிய வந்துள்ளது.
அப்பகுதியிலிருந்து 2 ஏகே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள்முற்றுகையிட்டு மேல் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கிறார்களா என்று சோதனை நடத்தி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications