உதயமாகிறது உத்தராஞ்சல்
டேராடூன்:
இந்தியாவின் 27-வது மாநிலமாக உத்தராஞ்சல் நவம்பர் மாதம் 8-ம் தேதி நள்ளிரவுஉதயமாகிறது.
டேராடூனை தலைநகராகக் கொண்டு உத்தராஞ்சல் இந்தியாவின் 27-வது மாநிலமாகஉதயமாகிறது. இந்த மாநிலம் நவம்பர் மாதம் 8-ம் தேதி நள்ளிரவில் கவர்னர் மற்றும்மாநில முதல்வர்கள் பதவியேற்புடன் உதயமாகிறது.
உத்தராஞ்சலின் கவர்னராக எஸ். எஸ். பர்னாலா 8-ம் தேதி பதவியேற்பார், 9-ம் தேதிமுதல்வர் பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 8-ம்நள்ளிரவுக்கு பின் கவர்னர் மற்றும் முதல்வர் பதவியேற்பு டேராடூனின் மையப்பகுதியான பரேட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் மனோகர் ஜோஷி, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர்சுஷ்மா ஸ்வராஜ், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர்களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்பார்கள்.
பதவியேற்பு விழாவை லக்னோ தொலைக் காட்சி நிலையம் நேரடியாகஒளிபரப்புகிறது. 400-க்கும் மேற்பட்ட செய்தித் தொடர்பாளர்கள் வரலாற்றுமுக்கியத்துவம் வாயந்த புது மாநில உதயம் துவக்க நிகழ்ச்சியைபடம்பிடிக்கவிருக்கிறார்கள்.
பதவியேற்றபின் கவர்னரும் முதல்வரும் நைனிடாலில் அமையவிருக்கும் புதியமாநிலத்திற்கான ஹைகோர்ட் துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாநவம்பர் மாதம் 9-ம் தேதி நண்பகலுக்கு முன் நடைபெறும்.
யு.என்.ஐ.