பாண்டியில் 4 பள்ளி மாணவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அரசு உயர் நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 4 பேர் காணாமல் போயுள்ளதாகப் போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், வழக்கம்போல் காலையில் பள்ளிக்குச் சென்ற நான்கு மாணவர்களும், மாலை வீடு திரும்பவில்லை.
அவர்களது பெற்றோர்கள், புகார் கொடுத்துள்ளனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications