3-வது அணி வருமா?... மூப்பனார் நழுவல்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக புதிய நீதிக் கட்சித் தலைவர்ஏ.சி.சண்முகம் கூறியுள்ள கருத்து குறித்து பதில் அளிக்க தமிழ் மாநில காங்கிரஸ்தலைவர் மூப்பனார் மறுத்து விட்டார்.
செய்யாறு செல்லும் வழியில் காஞ்சிபுரம் வந்த மூப்பனாரிடம், த.மா.கா. தலைமையில்மூன்றாவது அணி அமைக்கப்படும் என்று ஏ.சி.சண்முகம் கூறியுள்ளது குறித்துசெய்தியாளர்கள் கருத்துக் கேட்டனர்.
அதற்கு மூப்பனார் நேரடியாக பதில் தரவில்லை. வழக்கம் போலவே மழுப்பலாக பதில்கூறினார்.
ராஜ்குமார் விவகாரம் நீடிப்பது குறித்து கேட்டபோது, இது மிகவும் வருத்தம் தருகிறது.விரைவில் இப்பிரச்சினை முடிவுக்கு வர வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications