நரசிம்மராவுக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு
டெல்லி:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்பூட்டா சிங் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சி.பி.ஐ. நீதிமன்றத்தில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராவும், பூட்டாசிங்கும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இருவரும் தலா ரூ 10,000 ஜாமீன் தொகையும், காப்புத் தொகையாக ரூ 10, 000 மும் கட்டஉத்தரவிட்டது. மேலும் தற்காலிகமாக அவர்களது தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆர்.எஸ்.சோதி கூறுகையில், ராவுக்கும், பூட்டாசிங்குக்கும் இவ்வழக்கில் தொடர்பில்லாமல் இருப்பதற்கானசாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. அதனால் அவர்களது தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, 1993 ம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தின் போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காகஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக நரசிம்மராவ் உள்ளிட்டவர்கள் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி அஜித் பாரிஹோக், வழக்கில் தொடர்புடைய, நரசிம்மராவுக்கும், பூட்டாசிங்குக்கும் மூன்று வருட தண்டனையும், ரூ 2லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் ஒருவர் தண்டனை பெறுவது இதுவே முதல்முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications