நரசிம்மராவுக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு
டெல்லி:
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்பூட்டா சிங் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சுப்ரீம் கோர்ட் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
சி.பி.ஐ. நீதிமன்றத்தில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராவும், பூட்டாசிங்கும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இருவரும் தலா ரூ 10,000 ஜாமீன் தொகையும், காப்புத் தொகையாக ரூ 10, 000 மும் கட்டஉத்தரவிட்டது. மேலும் தற்காலிகமாக அவர்களது தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.
இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆர்.எஸ்.சோதி கூறுகையில், ராவுக்கும், பூட்டாசிங்குக்கும் இவ்வழக்கில் தொடர்பில்லாமல் இருப்பதற்கானசாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன. அதனால் அவர்களது தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, 1993 ம் ஆண்டு நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தின் போது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காகஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக நரசிம்மராவ் உள்ளிட்டவர்கள் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி அஜித் பாரிஹோக், வழக்கில் தொடர்புடைய, நரசிம்மராவுக்கும், பூட்டாசிங்குக்கும் மூன்று வருட தண்டனையும், ரூ 2லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் ஒருவர் தண்டனை பெறுவது இதுவே முதல்முறை என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications