For Daily Alerts
Just In
ஆசிய ஜூனியர் படகு போட்டிக்கு இந்திய அணி தேர்வு
பெங்களூர்:
சண்டிகர் நகரில் டிசம்பர் மாதம் 6 வது ஆசிய ஜூனியர் படகு போட்டி நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ள இந்திய அணி தேர்வு பெற்றுள்ளது.
இந்திய அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் குறித்த விவரங்களை கர்நாடக அமெச்சூர் படகு போட்டி சங்கம் வெளியிட்டுள்ளது.
அமெச்சூர் படகு போட்டி சங்க செயலாளர் ஜி.சோமசேகரப்பா இதுகுறித்துக் கூறுகையில்,
இந்திய அணியின் ஆண்கள் பிரிவில் 15 பேரும், பெண்கள் பிரிவில் 12 பேரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் சுரேஷ், மாளவிகா ஆகிய இருவரும்கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த ஊர்மிளா வெங்கட், லேகமித்ரா ராஜேந்திரன், ஊர்வசி வெங்கட், லாவண்யா ஆகிய 4 பேரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
பயிற்சியாளர்களாக மொத்தம் 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கஜேந்திரன் கர்நாடகத்தையும், சாக்கோ தமிழ்நாட்டையும் சேர்ந்தவர்கள்என்றார்.
Comments
Story first published: Wednesday, November 8, 2000, 5:30 [IST]