ஆட்சி அமைப்பதே குறிக்கோள்- காங்கிரஸ்
கரூர்:
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதே எங்கள் குறிக்கோள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.
கரூரில் தமிழக காங்கிரஸ் தவைர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் வரும் 12 ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் சோனியாவை எதிர்த்துப் போட்டியிடும் ஜிதேந்திர பிரசாத்துக்கு ஒருஓட்டு கூட கிடைக்காது.
நாட்டுக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்டவர் சோனியா காந்தி. காங்கிரஸ் தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமும் அவரே.
ஜிதேந்திர பிரசாத்துக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் வரவேற்பு கிடையாது. அவரது மாநிலத்தில் கூட அவருக்கு ஓட்டுக்கள் கிடைக்காது. இந்தமாத இறுதியில் சோனியா காந்தி மதுரைக்கு வரத் திட்டமிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டு வருவதே எங்கள் திட்டமாகும். வருகிற தேர்தலில் கூட்டணி பற்றி சோனியா தெரிவிப்பார். அவரதுமுடிவுக்குக் கட்டுப்படுவோம். தமிழக அரசியல் சூழ்நிலையை அவருக்குத் தெரிவிப்பது எங்கள் கடமை என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications