அசார் கொடும்பாவி எரிப்பு
ஹைதராபாத்:
அசாருதீனின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் அவரது உருவ பொம்மையை அவர் படித்த கல்லூரியின் மாணவர்கள் எரித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகமது அசாருதின். இவர் பணம் பெற்றுக் கொண்டு பல போட்டிகளில் இந்திய அணியின் தோல்விக்காகவிளையாடியதாக இவர் மீது புகார் கூறப்பட்டு வந்தது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான மனோஜ் பிரபாகர் அசாருக்கு எதிராக கடுமையான குற்றங்களை சுமத்தி வந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அசாருதீனுக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு உண்டு என அறிக்கை வெளியிட்டுள்ளது. இவர் மீதுகுற்றம் சுமத்தி வந்த மனோஜ் பிரபாகருக்கும் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.
அசாருதினுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க. , சிவசேனா தொண்டர்கள் இவரதுகொடும்பாவியை கொளுத்தி வந்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் கல்லூரியில் தான் அசாருதீன் படித்தார். தற்போது இந்தக் கல்லூரியில் படித்து வரும் ஏ.பி.வி.பி. இயக்க மாணவர்களி நகரின்முக்கியப் பகுதியான பஷீர்பாக் பகுதியில் கும்பலாக வந்து அசாருக்கு எதிராக கோஷம் எழுப்பி ஊர்வலமாக சென்று அம்பேத்கார் சிலைக்கு முன்பு அவர்கொடும்பாவியை எரித்தனர்.
அசாருதீன் எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர் என நாங்கள் பெருமைப்பட்டு வந்தோம். இப்போது அதை நினைத்து வெட்கப்படுகிறோம் எனபோராட்டம் நடத்திய மாணவர் தலைவர் கூறினார்.