For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்முவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மு:

ஜம்முவில் ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ஆதரவு லஸ்கார் - ஈ- தொய்பாதீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட்டேயில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் மறைவிடங்களில் ராணுவ வீரர்கள்துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அவர்கள் பெயர் அபு காஷா, அபு தார்டா, அபு காலித் என்று அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.சூரன்கோட்டேயில் இந்தத் துப்பாக்கிச் சூடு இரண்டு மணி நேரம் நீடித்தது.

இதே மாவட்டத்திலுள்ள பாட்டன்வா பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அபு அப்துல் என்றதீவிரவாதி கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் இறந்த இன்னொரு தீவிரவாதி குறித்த விவரம் எதுவும்தெரியவில்லை. அப்பகுதியிலிருந்து தீவிரவாதிகள் விட்டுச் சென்ற வெடிமருந்துகள், ஆயுதங்கள்கைப்பற்றப்பட்டன.

இதுதவிர, ராஜோரி மாவட்டம் காராக் பகுதியில் ஜாவித் கான் என்பவரை அடையாளம் தெரியாத தீவிரவாதிகள்சிலர் கடத்திச் சென்றுள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X