வாஸ்து முறை கட்டிடக் கலை படிப்பை துவக்குகிறது ஐ.ஐ.டி.
கரக்பூர்:
இந்தியாவில் முதல் முறையாக கரக்பூர் ஐ.ஐ.டி.யில் இந்திய சாஸ்திர முறைப்படி படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடலும்சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த புதிய படிப்பில் இந்திய பாரம்பரிய கட்டிட முறையான வாஸ்து முறைப்படி கட்டிடம் கட்டுவது குறித்த படிப்பு பயிற்று விக்கப்படுகிறது. இந்த படிப்பிற்குதேவைப்படும் பல்வேறு சிறந்த புத்தகங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரப்படி கட்டபட்டுள்ள கட்டிடங்களின் வீடியோ கேசட்டுகளும் சேகரித்துவைக்கப்பட்டிருக்கினறன.
இந்த கல்வியை பயிற்றுவிக்கும் பேராசியர் ஜெய்தாஸ் கூறுகையில், வாஸ்து கட்டிடக் கலை இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலை. இது குறித்துமாணவர்களுக்கு விளக்க கையடக்க செயல் விளக்க பொருட்கள் ஐ.ஐ.டி.யால் தயாரிக்கப்பட உள்ளது.
மொபைல் வேன் மூலம் கண்காட்சியை உருவாக்கி பள்ளி, கல்லூரி, பல்கலைகழக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.அதே போல் விரைவில் வரலாறு, வானிலை சாஸ்திரம்,மானிட வியல் சாஸ்திரம் போன்ற படிப்புகளையும் ஆரம்பிக்க உள்ளோம்.
வாஸ்து படிப்பு தொடர்பாக ஐ.ஐ.டி. நடத்திய வாஸ்து படிப்பு 2000 என்ற பெயரில் நடந்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கில் நாடு முழுவதிலிருந்தும் பல கட்டிடக்கலை நிபுணர்கள் கலந்து கொண்டனர் என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications