எம்.எல்.ஏ. அப்துல் லத்தீப் கார் உடைப்பு
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தேசிய முஸ்லீம் லீக் தலைவரும், எம்.எல்.ஏ. வுமான அப்துல் லத்தீப்பின் கார் உடைக்கப்பட்டது.
அப்துல் லத்தீப், தனது காரில் லால்பேட்டையைச் சேர்ந்த இனாமுன் உசேனுடன் வந்து கொண்டிருந்தார். அவரது காருக்குப் பின்னால் மேலும் 10 கார்கள்வந்து கொண்டிருந்தன. அவரது கார் சேத்தியாத்தோப்பு பகுதியிலிருந்து, லால்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.
சேத்தியாத்தோப்பு சுங்கசாவடி அருகே இவரது கார் வந்து கொண்டிருந்த போது சுங்க சாவடி ஊழியர்கள் காரை நிறுத்தி வாகனங்களுக்குக் கொடுக்கும்டோக்கனைக் கொடுத்துப் பணம் கேட்டனர்.
ஆனால் லத்தீப் மற்றும் பிறர் பணம் கொடுக்க முடியாது என்று கூறி விட்டனர். இதையடுத்து லத்தீப் ஆட்களுக்கும், சுங்கசாவடி ஊழியர்களுக்கும்இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் லத்தீப் காயமின்றி உயிர்தப்பினார். அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது. அவருடன் வந்த இனாமுன் மற்றும் அன்வர் சதார் ஆகியோர்காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications