லத்தியால் சல்யூட் அடித்த போலீஸ்காரர் சஸ்பெண்ட்
கரூர்:
கரூரில் குடிபோதையில் துப்பாக்கிக்குப் பதில் கையில் வைத்திருந்த லத்தியைக் காட்டி சல்யூட் அடித்த போலீஸ்காரர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கரூர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் பணிபுரிபவர் பாண்டியன். அவர் பணியில் இருந்த போது அங்கு கரூர்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமராஜன் திடீர் சோதனைக்கு வந்தார்.
போலீஸ் அதிகாரியைக் கண்டதும், அன்று நன்றாகக் குடித்திருந்த பாண்டியனுக்கு எதுவும் புரியவில்லை.
பொதுவாக போலீஸ் இலாகாவில் உயர் அதிகாரிகளுக்கு துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி சல்யூட் அடிப்பதுவழக்கம். திடீரென்று போலீஸ் சூப்பிரண்டைப் பார்த்த பாண்டியன் போதையில் கையில் வைத்திருந்த லத்தியைத்தூக்கிக் காட்டி சல்யூட் அடித்தார்.
இதைப் பார்த்ததும் போலீஸ் அதிகாரி ராமராஜன் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே இவ்விஷயம் குறித்துவிசாரணை நடத்தி பாண்டியனை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications