பெட்ரோல் விலை குறையுமா?
டெல்லி:
டெல்லியில் பிரதமர் வாஜ்பாய், மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவைச் சந்தித்து பெட்ரோலியப் பொருட்கள் விலை குறைப்பு பற்றி ஆலோசனைநடத்தினார்.
சமீபத்தில் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர்த்தியது.
நிதியமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் பெட்ரோலியப் பொருட்களான, டீசல், சமையல் கேஸ் போன்றவற்றின் விலையைக் குறைக்க முடியாது என்று மத்தியப்பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம் நாயக் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் வாஜ்பாய், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் சந்தித்து விலைகுறைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
எண்ணெய் தொகுப்பில் உள்ல ரூ 24 ஆயிரம் கோடி பற்றாக்குறை, விலைக்குறைப்பு குறித்து கூட்டணிக் கட்சிகள் வைத்துள்ள கோரிக்கைகள் ஆகியவைகுறித்து இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.
இதனால் இன்னும் சில தினங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலை ஓரளவிற்காவது குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஈராக்கிலிருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்யவும் வழியேற்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ராம்நாயக்அறிவித்துள்ளார்.