For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் கூச்சல்: அதிமுக வெளிநடப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபையின் குளிர்காலத் கூட்டத்தொடரின் நான்காவது நாளான வெள்ளிக்கிழமை அதிமுகஉறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.

வெள்ளிக்கிழமை சட்டசபையின் ஜீரோ நேரத்தில் அதிமுக எம்.எல்.ஏ.சுந்தரம், அ.தி.மு.க. வை எதிர்த்துதி.மு.க.வினர் நடத்திய கண்டனப் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் முல்லைவேந்தன் ஜெயலலிதாவைக் குறித்தும்,அ.தி.மு.க. வைக் குறித்தும் அவதூறாக பேசினார்.

இதைக் கண்டித்த அ.தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த காவேரி, சத்யவாணி மற்றும் எம்.ஜி.ஆர் மன்றத்தைச்சேர்ந்த பழனிமுருகன் ஆகியோரை முல்லைவேந்தன் மேடையிலிருந்து இறங்கி வந்து தாக்கியிருக்கிறார்.உடைகளையும் கிழித்துள்ளார்.

இந்த சம்பவத்தை போலீசார் பார்த்துக் கொண்டிருந்தனர். தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தவிஷயம் உடனடியாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

இதற்கு சபாநாயகர் பழனிவேல்ராஜன் அனுமதி மறுத்தார். ஆனால் அதிமுக எம்.எல்.ஏ.சுந்தரமோ மீண்டும்,மீண்டும் இப்பிரச்சனை குறித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அப்போது, மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுந்து, சபாநாயகர் அனுமதி மறுத்தபின், இதுகுறித்துக்கூச்சலிடுவது நாகரீகமல்ல என்றார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். பின்னர் அவையிலிருந்துவெளிநடப்புச் செய்தனர்.

முன்னதாக, அ.தி.மு.க பெண் தொண்டர்களை அவமானப்படுத்திய அமைச்சர் முல்லை வேந்தனை கைதுசெய்யக்கோரி 14-ம் தேதி தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. உண்ணாவிரதப்போராட்டமும், ஆர்பாட்டமும் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவிப்புவிடுத்துள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X