இந்த விமானத்தை ஓட்டுவதும் பெண்...பயணிகளும் சிறுமிகள்...
சென்னை:
குழந்தைகள் தினமான நவம்பர் 14-ம் தேதி ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த 100 சிறுமிகள் விமானத்தில் 1 மணிநேரம் பயணம் செய்ய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விமானத்தை ஓட்டப்போகும் பைலட் முதல் பணிப் பெண்கள் வரை எல்லோருமே பெண்கள் என்பது இதன்சிறப்பம்சம்.
இது தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் தமிழக மண்டல மேலாளர் ஏ.ஜி. கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடு முழுவதும் நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படவுள்ள குழந்தைகள் தினத்தை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம்வித்தியாசமாக கொண்டாடுகிறது.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த 100 சிறுமிகளை விமானத்தில் அழைத்துச் சென்று 1 மணி நேரம் பறக்கச் செய்யதிட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் கலந்துகொள்கிறார்.
அவருடன் ஜெட் ஏர்வேஸ் வர்த்தகப் பிரிவு துணைத்தலைவர் அனிதா கோயல், மக்கள் தொடர்பு துணைத் தலைவர்நந்தினி வர்மா, சென்னை இன்னர் வீல் சங்கத் தலைவர் ரேவதி ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் இணைந்து இன்னர்வீல் கிளப், இந்துஸ்தான் பெட்ரோலியம்உள்ளிட்ட 38 நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications