For Daily Alerts
Just In
நாகர்கோவில் அருகே மீனவர்கள் மோதல்
நாகர்கோவில்:
குலசேகரப்பட்டினம் புதுவை மீனவர்கள் மீன் பிடிப்பதை, மணப்பாடு பகுதி மீனவர்கள் தடுத்து வந்தனர் இது மோதலாக மாறியது.
குலசேகரப்பட்டினத்தின் புதுவை நகர் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதை மணப்பாடு பகுதி மீனவர்கள் எதிர்த்து வந்தனர். இந்ச எதிர்ப்பை மீறி நியூட்டன்என்பவருடைய படகில் புதுவை நகர் மீனவர்கள் 14 பேர் மீன் பிடிக்கச் சென்றனர்.
இதனால் கோபமடைந்த மணப்பாடு பகுதி மீனவர்கள் அவர்களை தாக்கு அரிவாள், கத்தி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்றனர். புதுவைமீனவர்கள் 14 பேரையும் சிறை பிடித்துக் கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் தலையிட்டு 14 மீனவர்களையும் மீட்டனர்.
Comments
Story first published: Saturday, November 11, 2000, 5:30 [IST]