ரஞ்சி கோப்பை கிரிக்கெட் : தமிழக அணிக்கு வெற்றி வாய்ப்பு
சென்னை:
கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகத்தின் வெற்றிவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
தமிழகத்திற்கும், கர்நாடகாவிற்குமான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சென்னையில் நடைபெற்று வருகின்றன. முதலில் பேட் செய்த தமிழக அணி477 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது.
இதையடுத்து பேட் செய்த கர்நாடக அணி 254 ரன்களுக்கு அனைத்து ஆட்டக்காரர்களையும் இழந்தது. இதன் மூலம் தமிழகம் 223 ரன்கள் அதிகம்பெற்று நல்ல வலுவான நிலையை அடைந்தது.
வெள்ளிக்கிழமையன்று தனது இரண்டாவது இன்னிங்சை தமிழகம் தொடர்ந்து ஆடியது. வெள்ளிக்கிழமை ஆட்ட நேர முடிவில் தமிழக அணி விக்கெட்எதையும் இழக்காமல் 77 ரன்கள் எடுத்தது.
ஆட்டத்தின் கடைசி நாள் சனிக்கிழமையன்று நடக்கிறது. அப்போது கர்நாடக அணியை பேட் செய்ய வைத்து அனைத்து ஆட்டக்காரர்களையும் விரைவில்ஆட்டம் இழக்கச் செய்து வெற்றி பெறச் செய்து தமிழகம் வெற்றி பெறச் செய்யும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.












Click it and Unblock the Notifications