இன்று முதல் சன் டி.வி.யில் கோடீஸ்வரன்
சென்னை:
சன் டி.வி.யில் சனிக்கிழமை முதல் கோடீஸ்வரன் நிகழ்ச்சி துவங்குகிறது.
நடிகர் சரத்குமார் தொகுத்து வழங்கும் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சி வாராவாரம் சனிக்கிழமையன்றும், ஞாயிற்றுக் கிழமையன்றும் இரவு 9 மணிக்குசன் டி.வி.யில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி சனிக்கிழமை முதல் துவங்குகிறது.
இந்த நிகழ்ச்சியை ராடன் பிக்சர்சும், சன் டி.வி.யும் இணைந்து தயாரிக்கின்றன. சென்னை எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டுஇந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த பிரம்மாண்ட அரங்கு தோட்டா தரணி மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது.
வினாடி வினா நிகழ்ச்சிகள் நடத்துவதில் புகழ் பெற்ற நிறுவனமான டெரிக் ஓப்ரைன் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 10 மணி வரை 52 வாரங்கள் ஒளி பரப்பாகும்.
கோடீஸ்வரன், மகாலட்சாதிபதி ஆகிய நிகழ்ச்சிகளை சன் மற்றும் விஜய் டிவிக்களில் ஒளிபரப்புவதை தடுக்குமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னைஉயர்நீதிமன்றம் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications