விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணி
கோவை:
பஸ்சின் முன் பக்கக் கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியே விழுந்த பெண், அதிசயமாக உயிர் தப்பினார்.
கோவையில் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பின்னர், பல இடங்களில் செக் போஸ்ட் அமைக்கப்பட்டது. இந்த செக் போஸ்ட்தற்போது அகற்றப்பட்டு விட்டது. இருந்தபோதிலும் அந்த இடங்களில் பல்வேறு சோதனைகளுக்காக டிவைடர்கள்உருவாக்கப்பட்டுள்ளன. இதே போன்று கரும்புக் கடை அருகே உக்கடம் குளத்தையொட்டி ஒரு செக் போஸ்ட் அமைக்கப்பட்டது.ஒரு வளைவில் அமைக்கப்பட்டுள்ள இந்த செக் போஸ்ட் தற்போது அகற்றப்பட்டு விட்டது.
ஆனால் ரோட்டில் போடப்பட்ட டிவைடர் எனப்படும் ஒரு அடிச் சுவர் மட்டும் அகற்றப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில்இந்த வழியாக ஒரு பஸ் வந்தது. பஸ்சிற்கு முன்பாக ஒரு ஸ்கூட்டர் இந்த டிவைடரில் மோதியது. இதனால் நிலை தடுமாறியஸ்கூட்டரில் மோதாமல் இருக்க டிரைவர் திடீர் பிரேக் அடித்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பகுதியில் கண்ணாடி அருகே பயணம் செய்த பெண் பயனி நிலைதடுமாறினார்.அவர் , முன் பகுதியில் இருந்த கண்ணாடியில் பலமாக மோதினார். இதனால் பஸ்சின் கண்ணாடி உடைந்து விழுந்தது. இதனால்,அந்தப் பெண் பயணி பஸ்சின் முன்பு போய் விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை எடுக்காமல் அப்படியே நிறுத்தி விட்டு பயணியை கிழே இறங்கி மீட்டார். அவருக்குபயணிகள் உதவினர். லேசாக காயம் அடைந்த அந்தப் பயணி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டுள்ளார்.
ஸ்கூட்டரில் சென்றவர், பஸ் மோதியதில் தூக்கி எறியப்பட்டார். இவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் ஸ்கூட்டர்மட்டும் பஸ் சக்கரத்தில் சிக்கி அப்பளம் போல் ஆனது.
இந்த ஆபத்தை சாதுர்யமாகத் தவிர்த்து உயிர் பலியாவதைத் தடுத்த டிரைவரைப் பொதுமக்கள் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications