சென்னையில் ரூ. 1800 கோடியில் புதிய விமான நிலையம்
சென்னை:
சென்னையில் ரூ. 1800 கோடியில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்துத்துறைஅமைச்சர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தை ஆய்வு செய்ய வந்த சரத்யாதவ் நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் புதிதாக ஒருசர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. இது மத்தியஅரசின்பரிசீலனையில் இருக்கிறது.
இதற்காக ரூ 1,800 கோடி கொண்ட திட்டம் விரைவில் முடிவு செய்யப்பட இருக்கிறது. சென்னை விமான நிலைய விரிவாக்கப்பணிகளுக்காக ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் ஏர்பஸ் 320 ரக விமானம் தரையிறங்க வசதியாக 50 ஏக்கர் நிலம் கையகப்பட்டுத்தப்பட்டுள்ளது.கோவை விமான நிலையத்தை விரிவு படுத்துவது குறித்தும் திட்டங்கள் உள்ளன.
1999-2000 ஆண்டில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ 45.27 கோடி லாபம் ஈட்டியுள்ளது என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications