இந்தியா பயமுறுத்திய வங்கப் புயல்
தாக்கா:
வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 366 ரன்கள்எடுத்துள்ளது.
கிரிக்கெட் குழந்தையான வங்கதேசம், தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடிக் கொண்டுள்ளது. தாக்காவில்நடக்கும் இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்களைக்குவித்தது. அமினூல் இஸ்லாம் 145 ரன்களை எடுத்து சாதனைப் புத்தகத்தில் தனது பெயரையும் சேர்த்துக் கொண்டார். சுனில்ஜோஷி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தற்போது இந்தியா தனது முதல் இன்னிங்ஸை ஆடிக் கொண்டுள்ளது. 81 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் சனிக்கிழமைஆட்டம் முடிந்தது. மூன்றாவது நாளான ஞாயிற்றுக்கிழமை தனது முதல் இன்னிங்ஸை மீண்டும் தொடர்ந்தது இந்தியா.
முரளி கார்த்திக் 43 ரன்களிலும், ரமேஷ் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ராகுல் டிராவிட் 18 ரன்களில் கணக்கை முடித்துக்கொண்டார். கேப்டன் கங்குலி நின்று, நிதானமாக ஆடி 84 ரன்களைக் குவித்தார்.
இந்திய பேட்ஸ்மென்களுக்கு சிம்ம சொப்பனமாக பந்துவீச்சாளர் நைமூர் ரஹ்மான் இருந்தார். அவரது சுழற்பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். அவரை சமாளித்து கங்குலியும், சுனில் ஜோஷியும் ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
சச்சின் டெண்டுல்கர், நைமூருக்கு மறக்க முடியாத நபராகினார். அவரது பந்தில் டெண்டுல்கர் ஆட்டமிழந்தார். டெண்டுல்கர்சேர்த்த ரன்கள் 18.
ஆட்ட நேர இறுதியில், ஜோஷி 71 ரன்களுடனும், அகர்கர் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நைமூர் ரஹ்மான்அபராமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்காக அவர் விட்டுக் கொடுத்த ரன்கள் 110.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications