காங். தலைவர் தேர்தலில் அடிதடி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலின்போது லேசான அடிதடி நடந்தது. இதில் சிலர்காயமடைந்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. சென்னையில் நடந்த மாநில காங்கிரஸ்தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலின்போது லேசான வன்முறை நடந்தது.
வாக்குப்பதிவு துவங்கியதும், சோனியாவை எதிர்த்துப் போட்டியிடும் ஜிதேந்திர பிரசாதாவின் ஏஜென்ட், ஹரிகுமார் எழுந்து,சோனியாவை எதிர்க்கும் காங்கிரஸ் பிரதிநிதிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என்று புகார் கூறினார். வாக்காளர்பட்டியலிலும் மோசடி நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதை காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் மறுத்தார். இதையடுத்து இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் எழுநதது. இருதரப்பினரும் பரஸ்பரம் புகார் கூறிக் கொண்டனர். இதில் லேசான அடிதடியும் நடந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications