ரயிலில் தீ: 165 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
காப்ரூன் (ஆஸ்திரியா):
ஆஸ்திரியாவின் காப்ரூன் நகரில் ஓடும் ரயில் தீப்பிடித்துக் கொண்டதில் 165 பேர் தீயில் கருகி இறந்தனர். சனிக்கிழமை இந்தபரிதாபச் சம்பவம் நடந்தது.
சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது ரயிலில் தீப்பிடித்தது. 12 பேர் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இறந்தவர்களில் 85 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் ஆஸ்திரியர்கள், 27 பேர் ஜெர்மானியர்கள், 10பேர் ஜப்பானியர்கள், 3 பேர் அமெரிக்கர்கள்.
இந்த ரயில் விபத்துக்குள்ளானபோது இன்னொரு ரயிலும் சுரங்கப் பாதை வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலிலும்உயிர்ப் பலி இருந்ததா என்பது குறித்துத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications