பிலிப்பின்ஸ் அதிபர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

Subscribe to Oneindia Tamil

மணிலா:

பிலிப்பைன்ஸ் அதிபர் ஜோசப் எஸ்ட்ரேடா மீது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு உள்ளதாக பிலிப்பைன்ஸ் அதிபர் எஸ்ட்ரேடா மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் அவரைக் கண்டிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில், கண்டனத்தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.

சபையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, தான் குற்றமற்றவன். என்னைக் கண்டிக்கும் தீர்மானத்தைக் கண்டு பயப்படவில்லை.அதன் மூலம் எனது களங்கம் துடைக்கப்பட்டால் மகிழ்ச்சியடைவேன் என்று எஸ்ட்ரேடா கூறியிருந்தார்.

இந்த தீர்மானத்தை செனட் கமிட்டியின் பரிசீலனைக்கு சபாநாயகர் மானுவல் வில்லார் அனுப்பினார். தற்போது இந்த தீர்மானத்தை செனட்ஏற்றுக் கொண்டு விட்டது. இதை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆரவார கோஷத்திற்கிடையே சபாநாயகர் மானுவல்வில்லார் அறிவித்தார்.

"எரேப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர். எஸ்ட்ரேடா நடிகராக இருந்தபோது, அவரது செல்லப்பெயர்தான் எரேப் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+