ஜெ. சிறந்த அரசியல்வாதி என்கிறார் வீரமணி
சென்னை:
ஊழல் ஒன்றும் பெரிதல்ல. ஜெயலலிதா ஒரு சிறந்த அரசியல்வாதி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், 1998 ம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியுடன் ஜெயலலிதா கூட்டு வைத்தார். அப்போதுநாங்கள் அவரை எதிர்த்தோம். தற்போது ஜெயலலிதா, பாஜகவை எதிர்க்கிறார். அதனால் நாங்கள் ஜெயலலிதாவை ஆதரிக்கிறோம்.
மதவாதக் கட்சியான பாஜகவை எதிர்க்கும் துணிச்சலான ஒரு பெண் ஜெயலலிதா. அதனால் அவரை ஆதரிக்கிறோம். ஜெயலலிதா ஒரு சிறந்தஅரசியல்வாதி. அவர் ஊழல் செய்வதாக கூறுவது பற்றி யெல்லாம் நாங்கள் கவலைப் படவில்லை. ஊழல் ஒன்றும் பெரிதல்ல. மதவாதம் அழிவதுதான்முக்கியம்.
நாளுக்கு நாள் சாதிக் கட்சிகள் பெருகி வருகின்றன. சாதிக் கட்சிகளால் தான் தமிழகத்திற்கு ஆபத்து வரப் போகிறது. சட்டமன்றத் தேர்தல்நெருங்குவதால் சாதிக் கட்சிகளும் வேகமாக உருவாகி ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டு சேர்ந்து, சட்டமன்றத்திற்கு செல்ல முயற்சிக்கின்றன. இதை தமிழகமக்கள் எப்படியாவது தடுக்க வேண்டும் என்றார் வீரமணி.












Click it and Unblock the Notifications