கருணாநிதியை ஆதரியுங்கள் ..கருப்பசாமி பாண்டியன்
தென்காசி:
தன்மானமுள்ள தமிழனாக வாழ வேண்டுமானால், கருணாநிதியை ஆதரிக்க வேண்டும் அதிமுகவிலிருந்து, விலகி திமுகவில் சேர்ந்துள்ள முன்னாள்எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் தெரிவித்தார்.
தென்காசி நகர திமுக சார்பில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு கருப்பசாமி பாண்டியன் பேசியதாவது:
இது சாதனை விளக்கக் கூட்டம் என்றாலும் ஜெயலலிதாவைக் கண்டிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஊழல், அராஜகம் ஆகியவற்றுடன் 5 ஆண்டுகள்ஆட்சி புரிந்து வந்த ஜெயலலிதாவுக்கு மக்கள் 96 ல் மரணஅடி கொடுத்தனர்.
பர்கூர் தொகுதியில் தோற்றதும் அரசியலை விட்டு அவர் விலகியிருக்க வேண்டும். அவர் அரசியலுக்கு வந்ததே விபத்துதான். ராஜீவ்காந்தியின்மரணம்தான் அவரைக் கோட்டைக்கு அனுப்பியது.
அழுகிய கனி என்று என்னை ஜெயலலிதா தூக்கி வீசிய போது, நான் தேடிய கனி என்று கருணாநிதி என்னை அரவணைத்தார். அவரை மனசாட்சி உள்ளயாரும் வெறுக்க முடியாது.
ஸ்டாலினை முதல்வராக்க கருணாநிதி துடிக்கிறார் என்கிறார் ஜெயலலிதா. ஸ்டாலின் யார்? 25 வருட அரசியல்வாதி. மிசாவில் கஷ்டப்பட்டு, ஜெயிலுக்குப்போனவர்.
கடந்த 4 வருடங்களில் சென்னை நகரை மிகவும் தூய்மையாக்கியுள்ளார் ஸ்டாலின். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை. நேரு மகள் இந்திரா, இந்திராமகன் ராஜீவ், கேரளாவில் கருணாகரனின் மகன் முரளிதரன், ஏன் லல்லு மனைவி கூட பதவியில் இருக்கிறார். இது புதிய விஷயமல்ல.
சுதாகரன், தினகரன், பாஸ்கரன் இவர்களெல்லாம் யார்? தியாகிகளா? இவர்கள் ஜெயலலிதாவின் மகன்களா?. நம்மை காக்க, தன்மானமுள்ளதமிழனாக வாழ, கலைஞரின் ஆட்சி மீண்டும் மலர அனைவரையும் பாடுபட கேட்டுக் கொள்கிறேன் என்றார் கருப்பசாமி பாண்டியன்.