தேர்தல் முறைகளில் கடல் அளவு மாற்றம் .. கில்
தஞ்சாவூர்:
இயந்திர ஓட்டுப்பதிவு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை அறிமுகப்படுத்தி இந்த முறை நடக்கும் தேர்தலில் பலமாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த முறை தேர்தலை மிகச் சிறப்பாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.அதற்கான அனைத்து முயற்சிகளிலும் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. தேர்தல் முறைகளில் கடல் அளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 620 மில்லியன் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 65 சதவீதம் பேருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி முடிந்து விட்டது. தமிழகத்தில்மட்டும் 62 சதவீதம் பேருக்கு அடையாள அட்டை வழங்கும் பணி முடிவடைந்து விட்டது.
வாக்காளர் பட்டியலை சரிபார்த்தல், புதிய வாக்காளர்களை சேர்த்தல், அடையாள அட்டை வழங்கும் போன்ற பணிகளை மாவட்ட கலெக்டர்கள் திறம்படச்செய்து வருகின்றனர் என்றார்.
தேர்தல் பணிகளைப் பார்வையிடுவதற்காகப் பாண்டிச்சேரி, சிதம்பரம் மற்றும் நாகப்பட்டினம் பகுதிகளுக்குச் சென்ற கில் தற்போது தஞ்சாவூர்வந்துள்ளார்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications